Saturday, July 23, 2011

உள் வெக்கை

தெரிந்த வகையில்
மண்வீடு கட்டி விளையாடினர்கள்
பலத்த காற்று வீச
கலைந்த மண்வீட்டை கண்டு
ஒருகணம் முழித்தாள்
மறுகணம் சிரித்தாள்
மறுபடியும் மண்வீடு கட்டி
சுற்றிசுற்றி விளையாடி சிரித்தார்கள்
மண்வீட்டை மிதித்தும் சிரித்தார்கள் !


குளிர்காற்று ஈரத்தில் சளி பிடிக்குமென
வேகமாக வீட்டிற்குள் இழுத்து சென்றதும்
படபடக்கும் திரைசீலையை பிடித்தவாறே
குழந்தை சொன்னாள் -
’அம்மா, வேர்க்குது ...’


நன்றி : கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&act=section&id=14763&Itemid=139

No comments:

Post a Comment