கால தேவா ...
துரோகியை எதிர்க்கிற வேளையில்
நீமறைந்து எய்திய இராமபானம்
மார்பில பாய்கிற வரை
உன் இருப்பு புரியவில்லை.
பானையில் வைத்தவிட்டு வந்து
பார்க்கலாம் என்று திரும்பியபோது
வெற்றிடமான பானையை கண்டு - நீ
வந்துபோனது உணர்ந்து அதிர்ந்தேன்.
கால்சுவடு கைசுவடு இல்லையெனினும்
உன் கையொப்பம் - நான்
உருவாக்குகிற அனைத்திலும்
உன்னை கணிக்க முடியாததால்
உன்னை கடக்க சொல்கிறார்கள் - நீ
இராமபானம் எய்தினாலும்,
பூமழை பொழிந்தாலும்
அலட்சியமாய் இருந்தால் கடப்பதாகுமாம்
கணிக்கவோ,கடக்கவோ
முயன்று கொண்டேயிருந்தால்
என் காலம் முடிந்துவிடும் - நீயிருப்பாய்
ஜகஜால கில்லாடியாய்!
நன்றி : பழைய திண்ணையில் வெளிவந்தது.
http://www.thinnai.com/index.php?module=displaystory&story_id=311041715&format=html
No comments:
Post a Comment