Saturday, July 23, 2011

ஓரு பார்வையில்

கிறுக்கலற்ற வெண்தாளை கண்டதும்
வரைய தோணுவதை போல ..
கறைகளற்ற அடுப்பறையை கண்டதும்
சமைக்க தோணுவதை போல ..
பறக்க தோன்றவில்லை,
களங்கமற்ற வானத்தை கண்டதும் !

ஏனோ தெரியவில்லை!!
அக்கணத்தில் , அவ்வொரு பார்வையில் ..
சிலிர்க்க வைக்கும்
மத்தாப்பு பூக்கள்
தெரித்தது உடலெங்கும்..

தெரித்தது தளும்ப தொடங்க ..
மொட்டை மாடியிலிருந்து தடதடவென்று  கீழிறங்கி
குழந்தையை கட்டி முத்தமிட்டு
நிலை பற்றாமல் சுற்றினேன் அங்குமிங்கும்..
ஏனோ தெரியவில்லை!!

ஜன்னல் வழியே - மீண்டும்
வானத்தை , கண்கள் விரிய கண்டு
என்னையறியாமல் சிரிக்க தொடங்கியிருந்ததும்..
தளும்பியது -  திண்டு திரசலில்லாமல்
விரவ தொடங்கியிருந்தது
விரிந்த அந்நீலவானம் போல...

நன்றி : திண்ணை

No comments:

Post a Comment