ஒற்றை மெழுகுவர்த்தி
பிரகாசமான சுடர்.
காற்றின் அசைவுக்கு
சுற்றி சுழன்று
அணைகிற போக்கில்
சப்பனமிட்டு -பின்
நிலைபடுத்தி
நெடுநெடுவென்று அலைஅலையாய்…
வாழ் சூட்சம நெளிவுகள் .
அணைந்த நெருப்பு,
தன் மரணத்திற்கு
ஒப்பாரி வைக்கிறது
கருகிய வாசனையுடன்
மெலிந்த புகையுடன்.
மறைந்த நிழல்,
மரணத்தை பதிக்காத
இசைவான தன் மறைவில்
கவிதை புனைந்தது
இசையான தன் இருப்பை
நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=1300
பிரகாசமான சுடர்.
காற்றின் அசைவுக்கு
சுற்றி சுழன்று
அணைகிற போக்கில்
சப்பனமிட்டு -பின்
நிலைபடுத்தி
நெடுநெடுவென்று அலைஅலையாய்…
வாழ் சூட்சம நெளிவுகள் .
சூட்சமங்களின் அவசியமற்று
மெழுகுவர்த்தியின் காலை சுற்றி
வட்டமாய், நீள்வட்டமாய்,நெளிநெளியாய்
மோன நிலையில் அசைவற்று -
படுவேகமாய்,படுவேகமாய்,
உருமாறி திளைப்பில் துள்ளுகிறது
நெருப்பின் நிழல்.
மெழுகுவர்த்தியின் காலை சுற்றி
வட்டமாய், நீள்வட்டமாய்,நெளிநெளியாய்
மோன நிலையில் அசைவற்று -
படுவேகமாய்,படுவேகமாய்,
உருமாறி திளைப்பில் துள்ளுகிறது
நெருப்பின் நிழல்.
தன் மரணத்திற்கு
ஒப்பாரி வைக்கிறது
கருகிய வாசனையுடன்
மெலிந்த புகையுடன்.
மறைந்த நிழல்,
மரணத்தை பதிக்காத
இசைவான தன் மறைவில்
கவிதை புனைந்தது
இசையான தன் இருப்பை
நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=1300
No comments:
Post a Comment