Saturday, July 23, 2011

விரத பேதம்

கண்ணுக்கெட்டிய
கைக்கெட்டிய தூரத்தில்
உணவு இருந்தும்
உண்ணாமல் இருந்தால் - விரதம்

 அது புண்ணியம்
அதுவே போராட்டம்.

கண்ணுக்கெட்டியவரை
கைக்கு கிட்டிய தூரத்தில்
உணவை காட்டாமல் இருந்தால் !! - பட்டினி

அது விதி
போராடி முன்னேற ஆலோசனை.
செய்தித்தாளில் வர வேண்டுமெனில்
இறப்பு - குறைந்தபட்ச தகுதி
பட்டினியில் தள்ள பட்டவனுக்கு..

வயிறு காய்வதிலும்
இருக்க பட்டவனென்றும்
இல்லாத பட்டவனென்றும் உண்டோ ??
தத்தரிகிட தத்தரிகிட தித்தோம் ...

நன்றி : பதிவுகள் கவிதைகள்
http://pathivugal.com/

No comments:

Post a Comment