Friday, July 22, 2011

பிதுக்கப்பட்டவர்கள்

தொழிற்பேட்டை பேருந்து நிலையத்தில்
தொண்டுகிழவர் கைத்தடியும் தடித்த கண்ணாடியுமாய்
தாண்டி போகிற யாவரிடமும் யாசிக்க...

     நொடி பொழுதும் திரும்பி பார்க்காத
     சடசடவென்று பரபரக்கும் மனிதர்களுக்கிடையே -
     கையில் கட்டட பொருட்களோடு ஓடிய
     தொழிலாளி குடும்பம் ஒன்று நின்று
     துளாவி காசு கொடுத்து  ஓடியது ..

உலகமயமாக்கலின் பொருளாதார சிக்கலில்
பிதுக்கப்பட்ட, விளிம்பிலிருந்த பற்பசையாக
ரோட்டோரத்தில் கையேந்தி இன்று இக்கிழவர்
நாளை அவர்களாகக் கூடுமென்ற கரிசனமோ?

     விளிம்பை தாண்டி தள்ளப்பட தள்ளப்பட
     உள்ளிருந்த அனைத்துக்கும் தன்முறை வரும் - என
     உணராத கூட்டம் கைபேசியுடன் வேகவேகமாக...

நன்றி : கீற்றில் வெளிவந்தது.
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14606:2011-05-14-08-01-32&catid=2:poems&Itemid=265

No comments:

Post a Comment