Saturday, July 23, 2011

தோப்பின் தொப்புள்கொடி

பாசக்கார பயபுள்ள
நெட்டுக்க வளர்ந்தாலும்
வேரை மண்ணின் தொப்புள்கொடியென
பிடித்து மரமாக நிற்கிறாய்

உன் ஒருக்கிளையின்
அடி தாங்குவார்களா
இருந்தாலும் வெட்டுவார்கள் வீழ்கிறாய்,
கொடிசுற்றிய சிசுவாய் ..
பிளந்து போகிறாள் மண் ..

மண்ணில் ஊர்ந்தது
வானில் பறந்தது
உயிர்தப்பிக்க பரிணாம வளர்ச்சி கொண்டு ...

நாகரிக வளர்ச்சி விரும்பாத ஆதிவாசியாக,
பரிணாம வளர்ச்சிவிரும்பாது
அசையா சொத்தானாய்
புலம் பெயர்க்கிறார்கள்
விலை பேசுகிறார்கள்

இவ்வளவுக்கும் இன்றும்
பசுமையாகவே சிரிக்கிறாய்
புத்தனுக்கும் போதனை
உன் சிரிப்பின் மடியில்..

நன்றி : 'பதிவுகள்' கவிதைகள் ஜூலை 2011
http://pathivugal.com/

No comments:

Post a Comment