Saturday, July 23, 2011

அழகா ? அவஸ்தையா ?

பதினென் வயதில்
பார்த்து பார்த்து ரசித்த
கண்ணாடியில் தெரிந்த சுயபிம்பம்
அழகா ? அவஸ்தையா ?
கண்ணாடி முன்
நீ நின்று ,நின்று
நான் நின்றாலும் நீயே தெரிகிறாய் - என
அண்ணன் சீண்டியது நினைவில்..
இப்பிம்பம்  அழகா ? அவஸ்தையா ?
.
பொங்கி விழும் அருவி ..
அருகில் பார்க்க ஆவல்  ,
அண்ணனும் நண்பர்களும்
மலையடிவாரத்திற்கு போக ,
நீ போக கூடாதென்று
குரலொன்று தடுக்க ,எழுந்த கேள்வி
இப்பிம்பம்  அழகா ? அவஸ்தையா ?
.
மலர்கொத்து என்றாலும்
கையில் பிடித்தபடியே,
எங்கு சென்றாலும்,
எந்த நேரத்திலும்
கீழே வைக்ககூடாதென
காப்பாற்ற படும்  பெண்மை
அழகா ? அவஸ்தையா ?

நன்றி :  'பதிவுகள்' கவிதைகள் ஜூலை 2011
 http://pathivugal.com/

No comments:

Post a Comment