Thursday, August 11, 2011

சம்பாஷனை

ஓங்கிய பொருளில், பேச்சில்
என்னை கீழே இறக்குவதும்,
அதையே நானும் செய்ய
நீ கீழே இறங்குவதுமாய்
அவரவர் பிடியை பிடித்தபடி
ஆடும் சீ-சா விளையாட்டா ? - சம்பாஷனை !


இயைந்த சொல்லில்,நயத்தில்
ஆமோதித்து கோல் தட்டி
இடிபடாத, பிடிபடாத ,லயித்த
சுய அபிப்பராய அசைவுகளுமான
குதுகூல கோலாட்டம் தானே ! சம்பாஷனை ?


நீயே சொல்லேன் !
யோசித்தாவது.......

நன்றி:பதிவுகள் (ஆகஸ்ட் கவிதைகள்)
http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=332:2011-08-10-03-17-34&catid=4:2011-02-25-17-28-36&Itemid=23

No comments:

Post a Comment