Sunday, September 18, 2011

காரணமில்லா கடிவாளங்கள்

பெரு வட்டம்
அதனுள் சிறுவட்டம்
மீண்டும் உள்வட்டம்
கருவட்டம் மையபுள்ளியாய்
குறிபலகை ஒன்று..

மைதானத்தில் எவனோ நட்டுவிட்டான்
வருவோர் போவோர் எல்லாம்
மையத்தை நோக்கி எய்த
ஆரம்பித்து விட்டனர் அம்பை..

பலகை வரை கூட செல்லாத ,
பெருவட்ட வளைவில் செருகிய ,
வட்டத்தை தொட்டு கவிழ்ந்த .- என
சிதறியது பலதரப்பட்ட அம்புகள்
தோல்வியென சுருங்கியது மனங்கள்

குறிபலகை இருக்கிறது என்பதற்காக
குறி எய்த வேண்டுமென
எவர் சொன்னது ?

கல்யாணம், குழந்தை, குட்டி
சம்பாத்யம்,பணம்,காசு
இதுதான் வாழ்க்கை என்றும்
எவர் சொன்னது ?

நன்றி : திண்ணை
http://puthu.thinnai.com/?p=4287

No comments:

Post a Comment