Wednesday, October 19, 2011

காதலின் கரைகளில்..

காதலன் ஒருகரையில்
காதலி மறுகரையில்
நதியில் கால் நனைக்காமல் ..


பேச்சால் கயிறு திரித்து
வீசுகிறான் காதலன்
இக்கரைக்கு இழுத்து
நதியின் பிரவாகத்தை போன்ற
தன் காதலில் ஜெயிக்க ...


காதலி வீசிய கயிறு
மூக்கணாங்கயிறாகி -
இளுவையாய் இழுத்தபடி அவள் -
நதியின் ஆழத்தை போன்ற
தன் காதலை நிரூபிக்க


இழுபறிகளின் நடுவே
சம்மந்தமே இல்லாமல்
காதல் மட்டும் , ஜீவநதியாக
களங்கமற்று எப்போதும் போல்..

நன்றி : பதிவுகள்
http://pathivugal.com/
அக்டோபர் கவிதைகள் - 1

No comments:

Post a Comment