Sunday, October 30, 2011

சொல்ல விரும்பாத கதை

பிரவாகமாக ஓடி கொண்டிருக்கையில்
அருவியாய் பாறைகளில் புகுந்து
வந்த வலிகளை சொல்ல வேண்டியதில்லை
யாருக்கோ ஊக்கமளிக்கும் என்றாலொழிய..

கடலுக்குள் கலந்த அமைதியில்
பிரவாகமாக ஓடிய பிரபாவத்தை
சொல்லுகிற தேவையும் இருக்காது.

அதிகபட்ச வலி மிகுந்த கதையொன்றை
சொல்லியே ஆக வேண்டுமெனின்
ஊற்றாய் புறப்பட வேண்டியதை
மலை உச்சியிலிருந்து தள்ளி ஓடவிட்ட
துரோகத்தை வேண்டுமானால் சொல்லலாம்.


நன்றி : கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=17111:2011-10-23-20-14-26&catid=2:poems&Itemid=265

No comments:

Post a Comment