Monday, December 26, 2011

அகாலம் கேட்கிற கேள்வி

ஆழ்வேர் நேச காதலினாலோ
பாசி படர், மாசு தொடர்பினாலோ
பத்து மாதம் காத்திருக்கிற எப்பிறப்பும்,
விநாடியில் மறைக்கிற அகால மரணமும்

அகங்காரமும், வன்மமும் தேவையா ?
அரிதிலும் அரிதான வாழ்க்கையில் என
கேட்கிறது காதோரம் ஓர் கேள்வி.

அகாலத்தின் கூர்முனையின் புரிதலை மையமாக்கி
வாழ்க்கை வட்டத்தை சுற்றி வரையாமல்,
பென்சில் முனையை நடுநாயகமாக்கி சுழற்றுகிறோம்
வாழ்க்கை வட்டத்தை கீறி கிழித்தபடி..

http://puthu.thinnai.com/?p=5883

No comments:

Post a Comment