Saturday, July 23, 2011

தெரியாது

தெரியாது ..
உண்மையிலேயே தெரியாது .. 

வினை விதைத்தவன் வினை அறுப்பான் , தெரியுமா ?
வினை விதைக்காதவன் வினை அறுப்பதாலும்,
விதைத்தவன் அறுக்காமலேயே சேர்ந்து விட்டதாலும் -
தெரியாது ... 

அலுவலகத்தில் அடுத்த ராஜினாமா ,யார் ?
இராணுவ ரகசியம் ஒன்று - முன்பே
தெரியுமென்ற பிரமையை ஏற்படுத்தலாம் என்றபோதும் -
தெரியாது ...

கடவுளென்று தனிநபர் இருக்கிறாரா ?
பிரார்த்திக்கும் போது பாதுகாப்பும்,
நிம்மதியும் உணர்ந்த போதிலும் -
தெரியாது ... 

தெரிந்திருப்பதாக நினைத்து ஏற்படும் ச்ங்கடங்கள் ... ?
‘தெரியாது’ என சொல்ல முடிவதால்
உண்மையிலேயே தெரியாது ... 

நன்றி : பதிவுகள் கவிதைகள்

No comments:

Post a Comment