Saturday, July 23, 2011

எதிர் வரும் நிறம்

ஓவிய பலகையில்
பளீரென்று வரவேற்ற ஊதா,
புதுப்புது நிறங்கள் ஏற்றபட ஏற்றபட
பின் அடுக்குக்கு மெல்ல நகர்ந்து கொண்டே போக …

முன்வாசலில் நிலைப்பாட்டை நிறுத்த
சிவப்பை போல ஆக்ரோஷமாக
இருந்திருக்க வேண்டுமோ ?
வெள்ளை போல வெள்ளெந்தியாய்
இருந்திருக்க வேண்டுமோ ?
நீலம் போல ஆழமாய்
இருந்திருக்க வேண்டுமோ ?
எல்லாமும் கொஞ்சமாக கலந்து
இருந்தது தவறோ ? என்றும்

ஓவியன் கையிலெடுக்கும் நிறம்
எந்நிறமாக இருக்க கூடுமோ என
ஏக்கம் கொண்ட ஊதா,
அனுமானங்களை எதனுடன் வகுத்தாலும்
விகிதங்களே மிஞ்சுவதை கண்டு,

எதிர் வரும் கணத்தின் மேல்
எதிர்பார்க்கும் நிறத்தை திணிக்காமல்
யதார்த்தமாய் இருக்க பழகியது .

நன்றி : திண்ணை

No comments:

Post a Comment