Wednesday, August 31, 2011

எப்படி.. இப்படி..

தானுண்டு, தன்வேலையுண்டு..
நேர்த்தியாக சுயநல வரைகோடை
வரைய தெரிந்த வகையறாக்கள்..

குருதி பாயும் இனவெறி கொடூரங்களை
வெறும் செய்தியாக மட்டும்
தேநீர் இடைவெளிகளில்
சப்பு கொட்டியபடி ..

எப்படி முடிகிறது இவர்களால்..
உணர்வுக்கும் உணர்தலுக்கும்
இடையேயான இரத்தம் பாயும்
நரம்பு ஏதும் அறுபட்டிருக்குமோ?

உதாசீன மனத்தின் மையக்கருவில்
இடியென இறங்கும் சுயநிகழ்வுகளில்
சூம்பிக் கிடக்கும் நாளங்கள்
உயிர் பெறுமோ, உள்வாங்குமோ ...

நன்றி : கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=16374:2011-08-30-04-41-32&catid=2:poems&Itemid=265

No comments:

Post a Comment