Monday, December 26, 2011

கல்லா … மண்ணா

என்னவோ துரத்துகிறது
எப்படியோ தப்பிக்கிறேன்


போயிராத கோயிலிருந்து
பிரசாதம் வருகிறது – கடவுள்
கொடுக்க சொன்னதாக ..


ஒடி ஒடி வருகிறேன்
ரயில் கிளம்பிவிட்டது !
பகீர் என்றானது – வாழ்க்கை
முடிந்து விட்டது போல் ..


தோளில் தட்டுகிறார்கள் – திரும்புகிறேன்
சிறுவயதில் உடன் படித்த தோழி.
சிரிக்கிறாள் , நானும் சந்தோஷமாக


வீடு வாங்கியதை தேவையற்று
சொல்லி கொண்டிருக்கிறேன் – அவள்
முகம் கோரமாக மாற தொடங்குகிறது


இறந்தவர்கள் நடக்கிறார்கள்
இயல்பாக பேசுகிறார்கள்


யாருடைய குழந்தையோ
பூங்கொத்து கொடுக்கிறது


என்னன்னவோ நடக்கிறது
முன்னுக்கு பின் முரணாக


விழித்து கொள்கிறேன்
கனவு கலைகிறது


நிகழ்வுகள் நிகழ்கின்றன
என்னன்னவோ நடக்கிறது – தொடர்கின்றன
புரிதலுக்கு பிடிபடாமலேயே …
இறந்தவர்கள் தென்படுவதில்லை
என்பதை தவிர ..

http://puthu.thinnai.com/?p=7306

No comments:

Post a Comment