Saturday, July 23, 2011

நியாயங்களும் தர்மங்களும்

மண்டையில் அடி வாங்கியவன்,
இரத்தம் சொட்டுவதை கண்டு
நியாயம் கேட்க ..

அவர்கள் சொல்கிறார்கள் :
“அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா உனக்கு ?”
இவர்கள் சொல்கிறார்கள் :
“அவர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா உனக்கு ?”

கண்ணுக்கெட்டிய வரலாற்றை கொண்டு -
நிகழ்வுகளின் சங்கலி கோர்வையில் ,
அநியாயம் எந்த இணைப்பிலிருந்து - என
அறியாது ....
பலவீனமாய் நகர்கிறது நகர வாழ்க்கை

காலுக்கு இழுத்தால் முகம் குளிர்கிறது
முகத்திற்கு இழுத்தால் கால் குளிர்கிறது என
பல சமயங்களில் ..
பத்தியும் பத்தாமலும் இழுபடுகிறது
நியாயங்களும் தர்மங்களும்

நன்றி : கீற்று
http://www.keetru.com/index.php?option=com_content&view=article&id=14868:2011-05-29-06-25-48&catid=2:poems&Itemid=265

No comments:

Post a Comment