Saturday, July 23, 2011

திரிந்து போன தருணங்கள்

மலர் கண்காட்சியில்
சிவப்பு நிறத்தில் சின்னதாய்
வெள்ளை நிறத்தில் வெகுளியாய்
மஞ்சள்  நிறத்தில் மகிழ்வாய் …
அத்தனையும் அழகு !!

எதை பார்ப்ப்து
எதை விடுவதென்ற
தவிப்பை தவிர்க்க தெரியாமல்
லயிக்க நேரமும் இல்லாமல் …

கால்பாத வளைகுழியில்
பிடிக்க நினைத்தும்
கடல் அலை இழுக்க …
உருளை உருளையாக
நகரும் மணல் துகல்கள்
வியப்பான கிச்சுகிச்சு …
 
பிடிக்க நினைத்த தருணங்கள்
உருளையாக கிச்சுகிச்சு மூட்டாமல்
விசுக் விசுக்கென்று மறைந்து ,
ஆழ்ந்த அனுபவங்களாய்  மாறாமல் -

திரிந்து போன தருணங்களாய் …
லயிக்க நேரமில்லாததால்
லயிக்க பழகாததால்

நன்றி : திண்ணை

No comments:

Post a Comment